டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப்.மாலதி அவர்களின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

0 0
Read Time:1 Minute, 25 Second

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 33 ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும் , தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள்  நிகழ்வும்Struer நகரில் 10.10. 20அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது .


தமிழீழப்பெண்கள் எழுச்சி  நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. 2ம் லெப் .மாலதி, லெப்.கேணல் குமரப்பா , புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது . அதனை தொடர்ந்து மக்கள் சுடர், மலர்வணக்கம் மாவீரர்களுக்கு செலுத்தினார்கள். அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது .
மேடை நிகழ்வாக   கவிதைகள் , பேச்சுகள், மாவீரர்களின் வீரத்தை உணர்த்தும் எழுச்சி கானங்கள் என்பன நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும் , தமிழர்களின் தாரகமந்திரத்துடன் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகத்துடன்” நிகழ்வு நிறைவு பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment